இந்தோனேஷிய சுனாமி எதிரொலி: குமரியில் உள் வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் மீண்டும் சுனாமி தாக்கிய நிலையில் இச் சம்பவம் நடந்தது.குமரி மாவட்டத்தின் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை கடற்கரை பகுதிகளில் பத்து மீட்டர்அளவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலின் பாறைகள், நீர் தாவரங்கள், பாசி படர்ந்த பாறைகள் வெளியில்தெரிந்தன.
இதனால் மக்கள் பீதியடைந்து கடற்கரையை விட்டு அகன்றன. நீண்ட நேரத்துக்குப் பின் கடல் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியது. இந்தோனேஷிய சுனாமி தாக்குதலின் எதிரொலியாகவே இது நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 525யைஎட்டிவிட்டது.












Click it and Unblock the Notifications