பழிவாங்கும் கருணாநிதி-எஸ்எஸ் சந்திரன் தாக்கு
மதுரை:
என் மீதான வரதட்சணை வழக்கு கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கையையே காட்டுகிறது என தலைமறைவாக இருந்துவந்த அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
தனது தம்பி மகனுடன் சேர்ந்து கொண்டு அவரது மனைவியை வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கில் சிக்கினார் எஸ்எஸ்சந்திரன். அந்தப் பெண் தந்த புகாரின்பேரில் எஸ்எஸ் சந்திரனை போலீசார் கைது செய்யச் சென்றபோது அவர் எஸ்கேப் சந்திரன்ஆனார். தப்பியோடி, தலைமறைவாகிவிட்டார்.நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற பின்னரே வெளியில் தலைகாட்டினார். இந் நிலையில் நிருபர்களிடம் எஸ்எஸ் கூறியதாவது:
இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத என் மீது நடவடிக்கை எடுத்தது கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கையையேகாட்டுகிறது. அவர் நியாயமானவராக இருந்தால் அவரது மகன் ஸ்டாலின் மீதான வழக்குகளை தூசி தட்ட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொன்றாக வாபஸ் பெற்று வருகிறது. ஆனால்திமுக ஆட்சியில் போட்ட வழக்குகளை வாபஸ் பெறாமல் கோர்ட்டில் சந்தித்து தன்னை குற்றமற்றவர் என ஜெயலலிதாநிரூபித்தார். என் மீது போடப்பட்ட வழக்கு விசித்தரமான வழக்கு. சம்பந்தமே இல்லாத என் மீது நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
கருணாநிதி என் குடும்ப பெண்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்சென்னை வீட்டிற்குப் போன மதுரை போலீசார் மனைவி, மகளை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அதை எனது வக்கீல்வீடியோ எடுத்ததால் இருவரையும் போலீசார் விட்டுவிட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications