சேலம் மருத்துவமனையில் பெண் நோயாளி கொடூரக் கொலை
சேலம்:
சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை, மர்ம நபர் ஒருவர் கத்தியால்குத்திக் கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
![]() |
இரவு 11 மணிக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து முதல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு அவர் மாற்றப்பட்டார்.அவருடன் இரவு மகள் ராணி, பேத்தி செல்வலட்சுமி ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், ராஜத்தின் அறைக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் மயக்க நிலையில்இருந்த ராஜத்தை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டான்.
சப்தம் கேட்டு எழுந்த ராணியையும் அந்த நபர் கழுத்தில் குத்தினான். இதில் ராணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.ராணியும், செல்வலட்சுமியும் போட்ட சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அதற்குள்ராஜம் இறந்து போயிருந்தார்.
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். தப்பிஓடிய நபரைப் பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போலீஸார் அழைத்து வந்த மோப்ப நாய், ஷிம்பா, கத்தில் குத்தில் லேசான காயம் அடைந்தராணியையே சுற்றிச் சுற்றி வந்தது. இதனால் போலீஸாரின் சந்தேகம் ராணி மீதும் படிந்துள்ளது. அவரே தாயைக்கொலை செய்து விட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![]() |














Click it and Unblock the Notifications