விபச்சார பணம்: மசாஜ் வாலிபரை தாக்க ஆள் அனுப்பிய துணை நடிகை
சென்னை:
விபச்சாரம் மூலம் வந்த பணத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, கேரளாவைச் சேர்ந்தஆயுர்வேத மசாஜ் செய்யும் வாலிபரை துணை நடிகை ஒருவர் ஆள் வைத்து அடித்ததாக போலீஸ் விசாரணையில்தெரிய வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவர் சென்னையில் உள்ள ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மசாஜ்செய்பவராக இருந்து வருகிறார். கடந்த 2ம் தேதி இவர் ஆழ்வார்திருநகர் பஸ் நிறுத்தத்தில் கத்திக் குத்துக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார்.அவரது நண்பர் காணுதேவன் என்பவர் கிருஷ்ணதாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் எந்தத்துப்பும் துலங்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணதாஸ் வெள்ளிக்கிழமை கண் விழித்தார்.இதையடுத்து அவரிடம் போலீஸார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கிருஷ்ணதாஸுக்கும் சில துணை நடிகைகளுக்கும் இடையேதொடர்பு உள்ளது. அவர்களில் சிலர் கிருஷ்ணதாஸ் உதவியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தனதுமையத்திற்கு மசாஜ் செய்ய வருவோரை இந்த நடிகைகளிடம் கிருஷ்ணதாஸ் அறிமுகப்படுத்தி வைத்துஅவர்களுக்கு உதவி வந்துள்ளார்.
தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை கிருஷ்ணதாஸுக்கு அந்த துணை நடிகைகள் கொடுத்துவந்துள்ளனர். இதுபோல விபச்சாரம் செய்யும் ஒரு டிவி துணை நடிகைக்கும், கிருஷ்ணதாஸுக்கும் இடையேபணத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
உன்னை போலீஸீல் மாட்டி விட்டு விடுவேன் என கிருஷ்ணதாஸ் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்அடைந்த அந்த துணை நடிகைதான் ஆள் வைத்து கிருஷ்ணதாஸைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தத் துணை நடிகையைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கிருஷ்ணதாஸின்டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள 63 பேரின் விலாசங்களையும் கைப்பற்றியுள்ள போலீஸார் அதில்உள்ளவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications