ஆந்திரா: 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஓங்கோல்:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்தகடும் சண்டையில் 8 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரகாசம் மாவட்டம் யெர்ரகொண்டபள்ளம் என்ற இடத்தில் உள்ள நல்லமலை காட்டுப் பகுதியில் போலீஸார்தீவிர சோதனை மேற்கொண்டிருந்தனர். அங்கு நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்துதேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நக்சலைட் தீவிரவாதிகள் கூட்டம் போலீஸாருடன் நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.
இந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இவர்களில் நான்கு பேர் பெண்கள். இவர்களிடமிருந்து 3 சாதாரண ரகதுப்பாக்கிகள், ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications