லெபனானிலிருந்து 2வது இந்திய குழு சென்னை வந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லெபனானிலிருந்து 2வது இந்தியக் குழு சென்னை வந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவதால் அங்கு தவிக்கும் 13,000 இந்தியர்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்துவர இந்தியா முடிவு செய்து போர்க் கப்பல்களை அங்கு அனுப்பி வைத்தது.முதல் கட்டமாக 441 பேர் 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு விசேஷ விமானம் மூலம் வந்தனர். இவர்களில்342 பேர் தமிழர்கள். இந்த நிலையில் மேலும் 131 இந்தியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.இவர்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அனைவரும் அவரவர் ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானில் நிலைமை படுமோசமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications