சிறுதாவூர் பங்களா: ஜெ. புது விளக்கம்
சென்னை:
சிறுதாவூரில் தானும், தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல, வாடைக்குத்தான்அந்த பங்களாவை எடுத்துள்ளோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஊழலற்ற மக்கள் நலனைக்கருத்தில் கொண்ட ஒரு ஆட்சியை நான் கொடுத்தேன்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக மைனாரிட்டி அரசு, என் மீது பழி சுமத்தவும்,என்னைப் பழிவாங்கவும் ஏதாவது பிரச்சினை கிடைக்காதா என்று தோண்டிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால்,வேண்டும் என்றே சிறுதாவூர் பங்களா குறித்து கற்பனையைக் கதையை உருவாக்கி பொய்யான குற்றச்சாட்டைக்கிளப்பியுள்ளது.
நானும், எனது தோழி சசிகலாவும் சிறுதாவூர் பங்களாவில் சில மாதங்கள் தங்கியிருந்ததால், எனக்கோ அல்லதுசசிகலாவுக்கோ இந்த பங்களா சொந்தமானதாக இருக்கும் என்ற கற்பனைக் குற்றச்சாட்டை திமுக தரப்பி பரப்பிவருகிறது.
சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான்அந்த பங்களாவை வாடகைக்கு எடுத்தோம். அவ்வப்போது அங்கு சென்று தங்குவோம். ஆனால் தலித்சமூக்ததினரை மிரட்டி, பங்களாவுக்கு அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில்துளியும் உண்மை இல்லை.
இதுதொடர்பாக திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், ஆதரவு டிவியும், பத்திரிகைகளும் பொய்யானசெய்திகளை கொடுத்து வருகின்றன. என் மீது பழி போடவும், நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யானகுற்றச்சாட்டை திமுகவின் தூண்டுதலின் பேரில் பரபபி வருகிறார்கள்.
இவற்றை சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டுவேன். வரதராஜன் போன்ற தலைவர்கள் கூடதிமுகவின் இந்த பொய்ப் பிரசாரத்தை நம்பி பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், இல்லாத பிரச்சினையைக் கிளப்பி, கூட்டணிக்கட்சியினரை இதுகுறித்துப் பேச வைத்து எனக்கு தர்மசங்கடம் கொடுக்க கருணாநிதி நினைக்கிறார். ஆனால்இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications