திரிசூல் ஏவுகனை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பாலஸோர் (ஒரிசா):
தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகனையான திரிசூல், ஒரிசா மாநிலம்சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள திரிசூல் ஏவுகனை தரையிலிருந்து விண்ணில் உள்ளஇலக்கைத் தாக்கும் தன்மை படைத்தது. குறுகிய தொலைவு ஏவுகனையா திரிசூல், இன்று முற்பகல் 11.50 மணிக்குஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள நடமாடும் ஏவுகனை தளத்திலிருந்து ஏவப்பட்டது.இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சோதனைக் கட்ட அளவில் உள்ள ஐந்துஏவுகனைகளில் திரிசூலும் ஒன்று. இந்த ஏவுகனையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில்பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications