கேரளாவில் தீப்பிடித்து எரிந்த தமிழக பஸ்: டிரைவர், கிளீனர் பலி
கோழிக்கோடு:
கோவையிலிருந்து கேரளாவுக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில்பேருந்தின் ஓட்டுநரும், கிளீனிரும் உடல் கருகி இறந்தனர்.
கோவையைச் சேர்ந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் பேருந்து, சனிக்கிழமைஇரவு கோழிக்கோடுக்குச் சென்றது. நேற்று காலை பயணிகளை இறக்கி விட்டதும், பேருந்தை கண்ணனூரில் ஒருஇடத்தில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் சின்னச்சாமி, கிளீனர் சந்தோஷ் ஆகியோர் பேருந்துக்குள் படுத்துத் தூங்கினர்.அப்போது திடீரென ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.பேருந்து தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும்அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க கடுமையாக முயன்றனர். தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல்போய் அவர்களும் தீயை அணைக்கப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து விட்டது.
பேருந்துக்குள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரும், கிளீனரும் பரிதாபாக உயிரிழந்திருந்தனர். பேருந்தின்பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் நாசவேலை காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications