பா.ஜ.கவின் டங் டங்... போரட்டம் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மணி அடித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், விலை வாசி உயர்வைக் கண்டித்தும்இந்தப் போராட்டம் நடந்தது.சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மகளிர் அணித் தலைவர் லலிதா சுபாஷ்தலைமையில் 50 பேர் ஆளுக்கொரு மணியை கையில் எடுத்துக் கொண்டு மணிஅடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
திருச்சியில், மாவட்ட தலைவர் பாலாஜி சிவராஜ் தலைமையில் 25 பேர் மணி அடித்துபோராட்டம் நிடத்தினர். மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட 6இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications