இலங்கை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பி.ஏ சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தித்தொடர்பாளர் சரவணமுத்து மகாகணபதி பிள்ளை அடையாளம் தெரியாத நபர்களால்இன்று காலை கொழும்பு நகரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சமூக நலத்துறை அமைச்சருமானடக்ளஸ் தேவானந்தாவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சரவணமுத்துமகாகணபதி பிள்ளை. 55 வயதான பிள்ளை, கொழும்பு நகரில் உள்ள வெள்ளவத்தைபகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வழிமறித்து துப்பாக்கியால்சுட்டுக் கொன்றது.
விடுதலைப் புலிகள் தான் பிள்ளையை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்றுஇலங்கை போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி, அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் கட்சியாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தீவிரகருத்து கொண்ட இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications