மலையாள மாணவர்களை தமிழ் படிக்க வற்புறுத்தக்கூடாது-கருணாநிதிக்கு அச்சுதானந்தன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

தமிழகப் பள்ளிக் கூடங்களில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை கட்டாயம் தமிழ் படிக்கவற்புறுத்தக் கூடாது என்று கூறி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடிதம்எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைதமிழ் கட்டாய பாடமாக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு சிறுபான்மை பள்ளிக் கூடங்களுக்கும் பொருந்தும் என அறிகிறேன். இதன் மூலம்,தமிழகத்தில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டு, மலையாள மீடியத்தின் கீழ், மலையாளத்தை முதல்மொழியாகக் கொண்டு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.

தமிழக அரசின் உத்தரவின் மூலம் இதுவரை முதல் மொழிாயக இருந்து வந்த மலையாளம், 3வது மொழியாகமாறும் நிலை ஏற்படும்.மேலும் இந்த 3வது மொழிக்குத் தேர்வு நடத்துவார்களா என்பதும் உறுதியாகத்தெரியவில்லை.

இதன் காரணமாக மலையாளம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னட மொழிகளை படிக்க மாணவர்களிடையேஆர்வம் குறையும், இம்மொழிப் பள்ளிக கூடங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகும்.

எனவே மலையாள மீடியத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+