ஏ.சி. போட மாட்டேன், டீ குடிக்க மாட்டேன்எந்திரிச்சு நின்னு கும்பிடுவேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னை நடிகர் சங்க பொதுச் செயலாளராக்கினால் அறையில் ஏ.சி. போட மாட்டேன்,சங்க செலவில் காபி, டீ குடிக்க மாட்டேன், மூத்த கலைஞர்கள் வந்தால் எழுந்து நின்றுகும்பிடுவேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு மன்சூர் அலிகான் போட்டியடுகிறார். தான்சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னவெல்லாம் செய்வேன்என்பதை பட்டியலிட்டுள்ளார் மன்சூர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர்களுக்கு நன்மை செய்யத்தான் போட்டியிடுகிறேன். என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்தால், எனது அறையில் ஏ.சி. போட்டுக் கொள்ள மாட்டேன்.சங்கச் செலவில் டீ, காபி கூட குடிக்க மாட்டேன். சாப்பாடும் சாப்பிட மாட்டேன்.

மூத்த கலைஞர்கள் வந்தால் எழுந்து நின்று கும்பிடுவேன். தலைவர் சரத்குமாருடன்இணைந்து செயல்படுவேன். சரத்குமார் பொதுவானவராகி விட்டார்.

ராதாரவி 14 வருடங்களாக தலைவராக இருந்துள்ளார். அவர் இருந்தபோது சங்கக்கடன் ரூ. 35 லட்சமாகத்தான் இருந்தது. ஆனால் ஒழுங்காக வட்டி கட்டாததால், அதுரூ. 2 கோடியாக அதிகரித்து விட்டது. விஜயகாந்த் வந்துதான் அதை அடைத்தார்.

சங்கத்தில் கே.ஆர்.விஜயா, ஸ்ரீவித்யா, செந்தில், ஸ்ரீபிரியா, கார்த்திக் என மூத்தஉறுப்பினர்கள் இருக்கிறாரக்ள். ஆனால் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகொடுக்காதது வருத்தம் தருகிறது.

சங்கத்தில் கிட்டத்தட்ட 600 தபால் ஓட்டுக்கள் உள்ளன. இவற்றை பெற பலதில்லுமுல்லு வேலைகள் நடந்து கொண்டுள்ளன. என்னுடன் போனில் பேசிய ஒருநடிகர், தபால் ஓட்டுக்களை அனுப்புவதில் தில்லுமுல்லு நடப்பதாக கூறினார். அதைத்தடுக்க வேண்டும்.

அதேபோல தேர்தலின்போது கலவரம் நடத்தவும் சதி நடக்கிறது. ஓட்டுப்பதிவின்போது ஓட்டுச் சீட்டுக்களை கிழிக்கவும் திட்டமிட்டுள்ளனர். எனவே போலீஸ்பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் மகா வில்லன் மன்சூர்அலிகான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+