மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம்: கேரள டாக்டர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தகேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அண்ணா நகர் சாந்தி காலனியில் நரம்பியல் வர்மா வைத்திய நிலையம் என்றபெயரில் கிளினிக் ஆரம்பித்தார் வாமணன். அங்கு நரம்பியல் சிகிச்சை மற்றும் மசாஜ்மையத்தையும் அவர் நடத்தி வந்தார்.

மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த ஆண்களைக் கவருவதற்காக பெண்களை மசாஜ்செய்ய பணியில் அமர்த்தினார். பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள கூடுதல்கட்டணம் வசூலித்தார்.

பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள ஏராளமான ஆண்கள் வர ஆரம்பித்த நிலையில்தனது கிளினிக்கிலேயே 3 தனித்தனி படுக்கை அறைகளை ரெடி செய்தார். அங்குவைத்து விபச்சாரத் தொழிலை ஆரம்பித்தார்.

இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மசாஜ் செய்து கொள்ளவந்தவர்கள் போல சாதாரண உடையில் போலீஸார் அங்கு சென்றனர். அப்போதுஅங்கு விபச்சாரம் நடப்பது உறுதியாகத் தெரிய வந்தது.

இதையடுத்து வாமணன், மசாஜ் செய்யும் பணியிலும், விபச்சாரத்திலும்ஈடுபடுத்தப்பட்ட பானுப்பிரியா, கற்பகம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.மேலும், புரோக்கர்கள் மனோகரன், சசிக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கிளினிக்கிலிருந்து ஏராளமான ஆணுறைகளும் பிடிபட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+