சென்னையிலிருந்து நோக்கியாவின் ஏற்றுமதி துவக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியாதொழிற்சாலையில் இருந்து செல்போன்கள் ஏற்றுமதியாகத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்குஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் செல்போன்கள் இப்போது ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.அடுத்த கட்டமாக மேற்கு ஆசியா, ஆப்பிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி விரைவில்தொடங்கும் என்று இந்தியாவுக்கான நோக்கியா நிறுவன இயக்குனர் ஜக்கா லெதேலாதெரிவித்தார்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் மொத்த செல்போன் எண்ணிக்கையில்20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும். இங்கு 10 மாடல் செல்போன்கள் தயாராகின்றன.மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கிய நோக்கியா தொழிற்சாலையில் இப்போது 2,700பேர் வேலை பார்க்கின்றனர்.
அவர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3,000 பேர் புதிதாக வேலைக்குசேர்க்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications