அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாகிறது
சென்னை:
இப்போது பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைந்துள்ள அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாக்கப்படும் எனமுதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டம பிரிக்கப்பட்டு அரியலூர் தனி மாவட்டமானது. ஆனால், அதிமுகஆட்சியில் அதை ஒரே மாவட்டமாக்கினார் ஜெயலலிதா.இந் நிலையில் இன்று சட்டப் பேரவையில் பேசிய கருணாநிதி, அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாக்கப்படும்
என்றார்.முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி இந்தப் பிரச்சனையை சட்டசபையில் கிளப்பினார். மீண்டும் அரியலூரைதனி மாவட்டமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, கடந்த திமுக ஆட்சியில் அரியலூரின் வளர்ச்சியை மனதில் கொண்டு அதை தனிமாவட்டமாக்கினோம். ஆனால், அதை ஜெயலலிதா பெரம்பலூருடன் இணைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 4 நாட்களில் அரியலூர் தனி மாவட்டமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 4 நாட்களில் அதைச் செய்யவில்லை. இந்த அரசு அமைந்து
40 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.இந் நிலையில் அரியலூர் தனி மாவட்டமாகும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
கருணாநிதியின் அறிவிப்புக்கு பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்தார்.