அதிக குழந்தைகள் பெறச் சொல்லும் ஆஸ்திரேலியா
கேன்பெர்ரா:
அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய பெண்களுக்கு அந் நாட்டு அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
அந் நாட்டு நிதித்துறை அமைச்சர் பீட்டர் காஸ்டெல்லோ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியதம்பதிகள் கணவருக்காக ஒரு குழந்தையையும் மனைவிக்காக ஒரு குழந்தையையும் நாட்டுக்காக ஒருகுழந்தையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்து பரபரப்பைஏற்படுத்தினார்.இந் நிலையில் இப்போது மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
ஆண்கள் அதிக அளவில் வீட்டில் தங்க வேண்டும். அப்போது தான் குழந்தை பிறப்பு வேகத்தை அதிகரிக்கமுடியும். அதிக குழந்தைகள் பெறுவது தான் ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்துக்கும் பொருளாதாரத்துக்கும்நல்லது.
கடந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு 1.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், இது போதாது.
பிறப்பு வீதத்தை உயர்த்தாவிட்டால் 2042ல் ஆஸ்திரேலியாவில் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 4மடங்காக உயர்ந்துவிடும். இள வயதினர் குறைந்து போய், நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுவிடும்.
வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்ய நம்மிடம் இளைய தலைமுறையினருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
இப்போதைய பிறப்பு வீதத்தின்படி பார்த்தால் 2050ல் இத்தாலியின் மக்கள் தொகை 70 லட்சம் அளவுக்குக்குறையப் போகிறது. ஜப்பானின் மக்கள் தொகை 1.8 கோடியளவுக்குக் குறைந்துவிடும். ரஷ்ய மக்கள் தொலை3.1 கோடி குறையும்.
இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாடுகள் பல திட்டங்களை அமலாக்கி வருகின்றன.ஆஸ்திரேலியாவும் ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 4,000 டாலர்களை தம்பதிக்கு பரிசாக வழங்கி வருகிறது.இது 2008ம் ஆண்டு முதல் 5,000 டாலராக உயர்த்தப்படும்.
வெளிநாட்டு பணியாளர்கள், அல்லது வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் மட்டுமேஆஸ்திரேலிய மக்கள் தொகை தட்டுப்பாட்டை நீக்கிவிட முடியாது. இதன்மூலம் ஆஸ்திரேலிய கலாச்சாரமும்வரலாறும் தான் மாறும் என்றார்.