For Daily Alerts
Just In
தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு படகைமூழ்கடித்தனர்.
நாகப்பட்டிணம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் 4 படகுகளில் மீன்பிடித்தனர். மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர்களது படகுகளை இலங்கை கடற் படையினர் இன்றுதடுத்து நிறுத்தினர்.பின்னர் அந்தப் படகுகளில் குதித்த கடற்படையினர், மீனவர்களை தாக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் கடலில் குதித்தனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் மீனவர்களின் ஒரு படகைதூப்பாக்கியால் சுட்டு முழ்கடித்துவிட்டு, இந்தப் பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்துவிட்டுச்சென்றனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் படகுகளில் ஏறி கரைக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து வேதாரண்யம்காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
Comments
Story first published: Tuesday, July 25, 2006, 5:30 [IST]