ஜனனி கள்ள நோட்டு: ரூ. 80 லட்சத்தை ஒப்படைக்க கோரும் சிபிசிஐடி
மதுரை:
கஞ்சா வழக்கில் ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணத்தில் ரூ. 80லட்சத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி சிபிசிஐடி போலீசார் மதுரை போதைபொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனனிடம் பிடிபட்ட ரூ.1.4 கோடி பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட்செய்யப்பட்டது. பின்னது அது பேங்க் ஆப் பரோடாவில் பிக்சட் டெபாசிட்டில்போடப்பட்டது.ஜனனியிடம் பிடிபட்ட இந்த பணத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டுஇருந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை ஒப்படைக்க கோரி சிபிசிஐடி போலீசார் முதலில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,பேங்க் ஆப் பரோடாவில் பிக்சட் டெபாசிட் ஆக போடப்பட்ட பணத்தை விடுவிக்கபோதை பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அந்த உத்தரவை பெற்ற பின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெயரில் பேங்க் ஆப்பரோடா, பாங்கர்ஸ் செக் தர வேண்டும். அந்த செக்கை பெற்று இந்தியன் ஓவர்சீஸ்வங்கி ரூ. 1.4 கோடியை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
பணத்தை பெற்ற பின் சிபிசிஐடி கூறுவது போல கள்ள நோட்டுக்கள் உள்ளனவா எனஅந்த நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். கள்ள நோட்டு இருந்தால் அதற்கேற்பஉத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தப் பணம் போதை பொருள் தடுப்பு சிறப்பு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந் நிலையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தயாளன் தமிழ்செல்வன் போதை பொருள் தடுப்புசிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜனனியிடம்கைப்பற்றப்பட்ட பணத்தில் கள்ளநோட்டு என சந்தேகிக்கப்படும் ரூ. 30 லட்சத்தைஎங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில் புதிய நோட்டுகளாக இருக்கும் ரூ. 50லட்சத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றிலும் கள்ள நோட்டுகளுக்குவாய்ப்புகள் இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.