சொத்துக் கணக்கை ஏற்கனவே சொல்லியாச்சு: கருணாநிதி பதிலடி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, எனது சொத்துவிவரங்களை விரிவாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ளேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வரும், இன்றையஎதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, வழக்கம் போலக, தரக்குறைவானவார்த்தைகளைக் கொட்டியும், என்னை ஒரு நபர் என்று சுட்டிக் காட்டியும் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.சிறுதாவூர் பங்களா விவகாரத்தில் தலித் மக்கள் நடத்துகிற கிளர்ச்சியே நான் தூண்டிவிட்டதுதான் என்றும், சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா வாடகைக்குகுடியிருந்ததாகவும், தனக்கு அது சொந்தமில்லை என்றும் குறிப்பிட்டு, என் மீதுஇழிமொழிககளை வாரியிறைத்து வசைபாடி அறிக்கை விடுத்தது மட்டுமல்லாமல்,
அந்த அறிக்கைக்குப் பதிலாக நான் சில கேள்விகளை எழுப்பியதும், இப்போது என்சொத்து விவரங்களைத் தெரிவிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
என் சொத்து விவரங்கள் சமீபத்தில் நான் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல்செய்தபோதே, பகிரங்கமாக தேர்தல் அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
என் மகன் அழகிரியானாலும், மருமகன் செல்வமானாலும், மாறனானாலும்ஒழுங்காகவும், முறையாகவும் வருமான வரி கட்டுபவர்கள். இப்போதும்கட்டுபவர்கள்.
அவர்களோ, நானோ, டான்சி நிலத்தை ஜெயலலிதா அபகரித்ததைப் போல எடுத்துக்கொண்டு பின்னர் உச்சநீதிமன்றத்திலே போய் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனசரண்டர் ஆனவர்கள் அல்லர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications