கிருஷ்ணா நீர்-ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை:
கிருஷ்ணா நதி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் திவான் 9 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவுடன் சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதியை அவர் சந்தித்து தெலுங்கு கங்கை நதி நீர்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.1983ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தான இத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்குஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா ஆற்று நீரை ஆந்திரா வழங்க வேண்டும்.
நீர் பங்கீடு குறித்தும், கால்வாய்கள் சீரமைப்பு குறித்தும் இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சு நடத்தவும்,பிரச்சனைகளைக் களையவும் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால்,இந்தக் கமிட்டி கடந்த 4 வருடமாகக் கூடவே இல்லை.
கர்நாடகம் தவிர ஆந்திர அரசுடனும் அதிமுக அரசு மோதல் போக்கை கடைபிடித்ததால் இக் கூட்டமேநடக்கவில்லை.
இந் நிலையில் ஆந்திர-தமிழக குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது சென்னைக்கு தண்ணீர் வரும்கால்வாயில் ஆந்திர பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீர் செய்வது குறித்தும், சோமசிலா, கண்டலேறுஅணைகளில் தண்ணீர் தேக்கும் அளவை அதிகரிப்பது குறித்தும் இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனைநடத்தினர்.
சோமசிலா அணையின் உயரத்தை இப்போதைய 59 அடியிலிருந்து 78 அடியாக உயர்த்த ஆந்திரம் விரும்புகிறது.