என்ஜாய் பண்ணி விட்டு எஸ்கேப்-காதலி புகார்
சென்னை:
கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு உல்லாசம் அனுபவித்து விட்டு இப்போது கல்யாணம்செய்து கொள்ள மறுப்பதாக காதலன் மீது காதலி சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த உல்லாசப் பறவையை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.வட சென்னை ராயபுரம் வைகை நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மகள் விஜி. மண்ணடியில் உள்ள தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் விஜி. அப்பகுதியில் தோல் நிறுவனம் நடத்தி வரும் ரமேஷுக்கும்,விஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்தக் காதல் பல முறை எல்லையும் தாண்டி உல்லாச நிலைக்கும் போயுள்ளது.
கல்யாணம் செய்து கொள்வதாக விஜியின் தலையில் அடித்து சத்தியம் செய்து பலமுறை அவருடன் உல்லாசம்அனுபவித்துள்ளார் ரமேஷ் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் குறித்து ரமேஷிடம் விஜிவற்புறுத்தியுள்ளர். ஆனால் அவர் கல்யாணம் எல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜி, ராயபுரம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் ரமேஷை அழைத்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.