சென்னை: பட்டப் பகலில் ரெளடிவெட்டி கொலை
சென்னை:
சென்னையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
கீழ்ப்பாக்கம் ராணி அண்ணா நகரை சேர்ந்த முரளி என்ற வெள்ளை முரளி (40)அந்தப் பகுதியில் ரெளடித்தனத்துக்கு பேர் போனவன்.இவனுக்கும் மற்றொரு ரெடியான சுதாகருக்கும் அவ்வப்போது மோதல்ஏற்படுவதுண்டு. சுதாகரை கொலை செய்ய முரளி முயற்சித்தான். ஆனால், சுதாகர்
தப்பிவிட்டான்.இந் நிலையில் அந்தப் பகுதியில் கோவில் விழாவிற்கு நிதி வசூல் செய்ய நண்பருடன்சென்றான் முரளி.
கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கிருஷ்ண பவன் ஓட்டலுக்கு அருகேஇருவரும் நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் முரளியை வெட்டி சாய்த்தது.
அதில் அந்த இடத்திலேயே முரளி இறந்தான். கொலைக் கும்பல் தப்பியோடிவிட்டது.அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதாகர் கோஷ்டி தான் முரளியைக் கொன்றதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொலை குறித்து இணை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூறுகையில்,
கொலை செய்யப் பட்ட முரளி, போலீஸ் பட்டியலில் மூன்றாம் தர ரெளடியாகஇருந்தார். அவர் மீது கொலை வழக்கும் உள்ளது. கடந்தாண்டு சுதாகர் என்றரெளடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சுதாகர் தலைமையிலான கும்பல் தான் முரளியை வெட்டி கொலை செய்துள்ளதாகவிசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்என்றார்.
முரளியின் மனைவி திங்கலா கூறுகையில், போன வருடம் சுதாகர் என்பவர் மீதுகொலை முயற்சி நடந்தது. எனது கணவர் தான் சுதாகரை கொலை செய்யதிட்டமிட்டதாக அவர்கள் சந்தேகப்பட்டனர்.
இதனால் சுதாகர் கும்பல் எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதையடுத்துஎன் கணவர் ஆந்திராவிற்கு சென்று பெயின்டர் தொழில் செய்து வந்தார்.
ஊரில் இருந்து வந்தவரை சுதாகர் கும்பல் தான் வெட்டி கொலை செய்துள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications