நினைவுச் சின்னமான பரிதிமாற் கலைஞரின் வீடு
மதுரை:
தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கக் கோரி 19ம் நூற்றாண்டில் முதல் முறையாகக்குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த மதுரை வீட்டை நினைவுச் சின்னமாகதமிழக அரசு அறிவித்துள்ளது.
1870ல் மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் பிறந்தவர் சூரியநாராயண சாஸ்திரிபிறந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவவியலில் பட்டப் படிப்பை முடித்துஅதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார்.தத்துவம் பயின்றாலும் தமிழில் நல்ல புலமையும் தீராத ஆர்வமும் கொண்டவர்சாஸ்திரி. இதனால் தமிழ்ப் பேராசிரியர் பதவியை விரும்பி ஏற்றார். இத்தனைக்கும்ஆங்கிலேயர் ஆட்சியில் ஆட்சியில் தமிழ் பேராசிரியர்களுக்கு சம்பளம் மிகவும்குறைவு.
ஆனாலும் மொழி மீது கொண்ட பாசத்தால் தமிழ்ப் பேராசிரியர் பணியில்தொடர்ந்தார்.
மதுரையில் தமிழ் சங்கம் அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். தமிழுக்கு செம்மொழிஅந்தஸ்து வேண்டும் என குரல் கொடுத்தார்.
உ.வே. சாமிநாதய்யர், திரு.வி. கல்யாணசுந்தரனார், பூர்ணலிங்கம் பிள்ளை போன்றதமிழறிஞர்களின் அன்பைப் பெற்ற சாஸ்திரியை "திராவிட சாஸ்திரி என அழைத்தனர்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை தமிழ் மீது கொண்ட பற்றால் "சூரியன்(பரிதி), "நாராயணன் (மால்), "சாஸ்திரி (கலைஞன்) என "பரிதிமாற் கலைஞன் எனமாற்றி கொண்டார்.
தமிழ் இலக்கணம், இலக்கியம், நாடகம் என 12 நாவல்களை எழுதியுள்ளார்.
டிபி நோயால் தாக்கப்பட்ட சாஸ்திரி 33வது வயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
இந் நிலையில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த மதுரை வீட்டை நினைவுச் சின்னமாகதமிழக அரசு இப்போது அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications