இலவச கலர் டிவி: டெண்டர் கேட்கும் 10 நிறுவனங்கள்
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் டிவிக்களை வழங்கும் பொறுப்பைதங்களுக்கு வழங்கக் கோரி 10 நிறுவனங்கள் டெண்டர் கொடுத்துள்ளன.
தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 30,000 பேருக்கு இலவச கலர் டிவிவழங்கப்படவுள்ளது. இதற்கான உலகளாவியல் டெண்டர் விடப்பட்டுள்ளது.இதையடுத்து 10 நிறுவனங்கள் டெண்டர் கொடுத்துள்ளன.இந்த நிறுவனங்கள் யார் யார் என்பதை டெண்டர்களைக் கையாளும் தமிழக அரசின்எல்காட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. டெண்டர்களைப் பரிசீலிக்கும் பணி நடந்துவந்தது.
திங்கள்கிழமை இரவு இந்தப் பரிசீலனை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்றுமாலைக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் அடிப்படையில் வரும் 27ம் தேதி கலர் டிவி திட்டம் தொடர்பாகஅமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவைக் கூட்டி முதல்வர்கருணாநிதி ஆலோசனை நடத்துவார். அதன் அடிப்படையில் டெண்டர் இறுதிசெய்யப்படும்.
டெண்டர் கொடுத்துள்ள நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல நிபந்தனைகளைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிவிக்கு 2 வருட உத்தரவாதம் தர வேண்டும், இலவசசர்வீஸ் செய்து தர வேண்டும், தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சர்வீஸ்சென்டர்களை துவக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications