தீவிரவாதிகளுடன் தொடர்பு: 2 மத்திய படை வீரர்கள் கைது
ஜம்மூ:
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 2 ராஷ்ட்ரீயரைபிள் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஷ்ட்ரீய ரைபிள் படை, மத்திய பாரா மிலிட்டரிப் படையாகும்.இந்திய விமானப்படையில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகமுன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளரும், தற்போதைய தேசிய பாதுகாப்புஆலோசகருமான நாராயணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதை மறுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அது தவறானதகவல் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் தற்போது லஷ்கர்தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக கூறி 2 ராஷ்ட்ரீயரைபிள் படை வீரர்களை ஜம்மூ காஷ்மீர் மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முகம்மது ஷகீல் மற்றும் அப்துல் ஹக் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகையான உதவிகளைஇவர்கள் இருவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சிம் கார்டுகள், செல்போன்கள், பென்சில் பாம்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர இன்னொரு ராஷ்ட்ரீய ரைபிள் வீரரிடமும் 2 போலீசாரிடமும்விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications