For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருட்டு செல்போன்-மனைவியுடன் அரட்டை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருடிய செல்போன் மூலம் மனைவியுடன் அரட்டை அடித்த வாலிபரை போலீஸார்கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், சிம்கார்டுகளை போலீஸார் பறிதல் செய்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையிலிருந்து சிலநாட்களுக்கு முன்பு ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள்,சிம் கார்டுகள் திருடு போயின. கடையின் மேற் கூரையைப் பிய்த்து இவைதிருடப்பட்டன.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஆழ்வார் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆழ்வார் தனது சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்த ரூ. 10,000 டாக் டைம் உள்ளசெல்போனும் திருடு போயிருந்தது.

இதையடுத்து திருடப்பட்ட அந்த செல்போன்களில் இருந்து பேசப்பட்டும் எண்களைபோலீஸார் கண்காணித்தனர்.

அப்போது திருடப்பட்ட ஒரு போனிலிருந்து ஒரு குறிப்பிட்ட செல்போனுக்கு ஒரேநாளில் பத்து முறைக்கும் மேல் பேசப்பட்டது தெரிய வந்தது.

தொடர்பு கொள்ளப்பட்ட அந்த செல்போன் யாருடையது என்று போலீசார்விசாரித்தபோது ராஜசேகர் என்பவர் மாட்டினார்.

இவர் தான் செங்குன்றம் கடையில் செல்போன்களைத் திருடியவர் என்பதும் தெரியவந்தது.

தனது போனை மனைவியிடம் தந்துவிட்டு திருடிய போனில் இருந்து மனைவியுடன்அடிக்கடி பேசியுள்ளார்.

அவரிடமிருந்து செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள், சிம் கார்டுகளை போலீஸார்கைப்பற்றினர். ராஜசேகரும் கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X