மனைவியிடம் தகராறு- மகளை எறித்த தந்தை
தஞ்சை:
பணம் தர மனைவி மறுத்ததால், தூங்கிக் கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணைய்ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் அருகே கீழ கபிஸ்தலம் தின்னை மரத்து பிள்ளையார் கோயில்தெருவை சேர்ந்த அருள் மரியநாதன் (48). வீட்டில் சேமித்து வைத்திருந்த உளுந்தம்பருப்பு மூட்டையை நேற்று முன்தினம் ரூ. 4,000க்கு விற்றார்.அடகு வைத்த நகையை ரூ. 3,000 கொடுத்து மீட்டார். மீதமிருந்த ரூ. 1,000த்தைமனைவி ஜாக்குலினிடம் கொடுத்தார். இந் நிலையில் குடித்து விட்டு இரவு 11மணியளவில் வீட்டுக்கு வந்தார் அருள் மரியநாதன்.
போதையின் உச்சத்தில் இருந்த அவர், தான் கொடுத்த ரூ. 1,000 கொடுக்குமாறு தனதுமனைவியைக் கேட்டார். பணம் முழுவதும் செலவாகி விட்டதாக ஜாக்குலின் கூறினார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
வீட்டை விட்டு வெளியே போ என மனைவி மீது தண்ணீரே எடுத்து ஊற்றியுள்ளார்.அவர் மறுத்ததால் வீட்டில் இருந்த 8 லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த மகள் வினோலியா (14) மீது அருள் மரியநாதன் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
இதை பார்த்த அவரது மகன்கள் செபஸ்டின்ராஜ் (10), எட்வின்ராஜ் (8) ஆகியோர்வெளியே ஓடிவிட்டனர். உடனே ஜாக்குலின் சாக்கு வைத்து தீயை அணைத்தார். இதில்அவருக்கும் தீக் காயம் ஏற்பட்டது.
பின்னர் தீக்காகயங்களுடன் மகளை கும்பகோணம் அரசு மருத்துவமனையில்ஜாக்குலின் சேர்த்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வினோலியா சிகிச்சைபெற்று வருகிறார். தப்பியோடிய அருள் மரியநாதனை கபிஸ்தலம் போலீசார் கைதுசெய்தனர்.