சிறையில் மதானிக்கு ஏன் விவிஐபி மரியாதை-பாஜக
சென்னை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு கைதியான, கேரளாவின் அப்துல் நாசர்மதானி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளகேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.தனது உடல் நலத்தைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றுபலமுறை முயன்றும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந் நிலையில் சமீபத்தில்நடந்த தமிழக ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, கேரள முதல்வர் அச்சுதானந்தன்சென்னை வந்து மதானி மீது பரிவு காட்டுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கைவிடுத்தார்.
இதைப் பரிசீலிப்பதாக கருணாநிதி உறுதியளித்தார். அதன்படி முதல் கட்டமாகமதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போதுகோவை சிறைக்குள்ளேயே மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் மதானி சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறையில் இருந்துவருகிறேன். இதன் காரணமாக எனது உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.தற்போது சிறைக்குள் எனக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுர்வதே சிகிச்சைபோதுமானதாக இல்லை.
ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால்தான் உரிய முறையில்சிகிச்சை தர முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனது செயற்கைக்கால்களையும் மாற்ற வேண்டிய நெருக்கடியில் நான் இருக்கிறேன். எனது கால்களைஉடனடியாக மாற்றிக் கொள்ளாவிட்டால் எனது நிலைமை மோசமாகி விடும் எனடாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும்எனக்கு எதிராக சாட்சி சொல்லவில்லை. எனவே என்னை ஜாமீனில் வெளியேவிடுவதால் வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார்மதானி.
இதற்கிடையே, 58 பேரின் உயிரைப் பறிக்க முக்கியக் காரணமாக இருந்த மதானிக்குதமிழக அரசும், கேரள அரசும் இவ்வளவு மரியாதை கொடுப்பது ஏன் என்று பாஜககேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மதானி தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர்ஜோஷி பேசுகையில், 58 பேர் உயிர் போக காரணமாக இருந்த மதானிக்கு கோவைமத்திய சிறையில் விவிவிஐபி மரியாதை கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள்வெளியாகின்றன.
சிறைக்குள்ளேயே அவருக்கு ஆயுர்வதே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும்,மதானியை விடுவிக்க கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி தீவிரமாக முயன்று வருவதாகவும்செய்திகள் வெளியாகின்றன. இந்த விஷயத்தில் கேரள அரசு இத்தனை தீவிரம்காட்டுவது ஏன்?
58 பேரின் உயிரைப் பறித்த ஒருவருக்காக தமிழக அரசும், கேரள அரசும் இந்தஅளவுக்கு பரிவும், மரியாதையும் காட்டுவது ஏன்? அப்படியானால் அந்த 58 பேரின்குடும்பங்களுக்கு இந்த அரசுகள் என்ன பதில் சொல்லப் போகின்றன என்றார் ஜோஷி.