நடிகை நிர்மலாவும் குற்றவாளியாக சேர்ப்பு:சிறையில் நவீன்குமாருக்கு ஹோமோ தொல்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள்மதுதேவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் நவீன்குமாரின்கள்ளக் காதலி நடிகை நிர்மலா 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Madhudevi
மதுதேவி தற்கொலை வழக்கில் கணவர் நவீன்குமார் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை மனோகரன், தாயார் கனகவல்லி, தங்கை உமா,நடிகை நிர்மலா ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

மதுதேவியை தற்கொலைக்குத் தூண்டியதாக மனோகரன், கனகவல்லி, உமா,நவீன்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்போது இந்த வழக்கில் நடிகை நர்மலாவையும் போலீஸார் சேர்த்துள்ளனர். அவரை5வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். முதல் குற்றவாளியாக நிவீன்குமாரும்,அவருக்கு அடுத்து உமா, கனகவல்லி, மனோகரன் ஆகியோர் குற்றவாளிகள்பட்டியலில் உள்ளனர்.

நிர்மலாவுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். இந்த வழக்கில்நிர்மலா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி, அவருடைய கார்டிரைவர் ஆகியோரை முக்கிய சாட்சிகளாக போலீஸார் சேர்த்துள்ளனர்.

இதற்கிடையே மத்திய சிறையில் தன்னுடன் தங்கியுள்ள கைதிகள், ஓரினச்சேர்க்கைக்கு வலியுறுத்தி சித்திரவதை செய்வதாக நவீன்குமார் புலம்புகிறாராம். நவீன்குமார் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக் கைதி என்பதால் மற்ற சாதாரண கைதிகளுடன் சேர்த்து நவீன்குமாரும்அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கற்பழிப்பு, கொலை முயற்சி, கொலை உள்ளிட்டவழக்குகளில் கைதான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நவீன்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி அடித்து, உதைப்பதாககூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரிடம் நவீன்குமார் புலம்பி அழுதுள்ளாராம்.எப்படியாவது என்னை ஜாமீனில் விடுதலையாக உதவுங்கள் என்று அவர்கெஞ்சுகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+