ஊழல்: 2,000 பத்திரப் பதிவுதுறை ஊழியர்கள் கூண்டோடு டிரான்ஸ்பர்
சென்னை:
பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடுகளை களைய ஊழியர்கள் அனைவரையும்ஒட்டு மொத்த இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படிதமிழகம் முழுவதும் உயரதிகாரிகள் முதல் பியூன் வரை சுமார் 2,000 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஊழல் மண்டிப் போய் கிடக்கும் முக்கிய துணை பத்திரப்பதிவு துறை.கடந்த அதிமுக ஆட்சியின்போது சொத்துக்களை பதிவு செய்ய போலி முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது சொத்துக்களை சிலர் ஏமாற்றிஇருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது பத்திரப்பதிவுத் துறையின்பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி ஜூலை 1ம் தேதி முதல் சொத்துக்களை விற்பவர் மற்றும் வாங்குபவர்களின்புகைப்படங்கள் பத்திரங்களில் ஒட்டும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இரண்டாவது இத்துறையில் பணியாற்றும் பியூன் முதல் உயர் அதிகாரிகள் வரைஅனைவரையும் இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றுவேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுஇவர்கள் அனைவரையும் இந்த மாதம் 31ம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்றம்செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு, பத்திரப்பதிவுத்துறையின் தலைவர்உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாவட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார்.அசிஸ்டெண்ட், பியூன் ஆகியோருக்கு தனித்தனியாக டிரான்ஸ்ப்ர ஆர்டர்களைபோட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 750 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில்பத்திர பதிவு அலுவலகங்கல் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில்பணியாற்றும் 514 சப்-ரிஜிஸ்ட்ரார்கள், 12 மாவட்ட பதிவாளர்கள் உள்பட சுமார்2,000 பேர் டிரான்ஸ்பர் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications