For Quick Alerts
For Daily Alerts
Just In
கூவத்தில் மிதந்த பெட்டியால் பரபரப்பு!
சென்னை:
மணக்கும் கூவம் ஆற்றின் நடுவே மிதந்து வந்த காகிதப் பெட்டியால் பெரும்பரபரப்பு ஏறிபட்டது.
சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகரையொட்டி கூவம் ஆறு ஓடுகிறது. இந்தஆற்றில் நேற்றிரவு ஒரு அட்டைப்பெட்டி மிதந்து வந்தது. பளபளபபாக இருந்ததால்அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.பெட்டியில வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார் மின்னல் வேகத்தில்விரைந்து வந்தனர்.
பெட்டியை நெருங்கிப் பார்த்தபோது, அப்பெட்டியின் மீது ஏராளமான மின்மினிப்பூச்சிகள் இருந்தது தெரிய வந்தது. அதனால்தான் பெட்டி பளபளவெனமின்னியுள்ளது.
பூச்சிகளை விரட்டி விட்டு பெட்டியைமீட்டு கரைக்குக் கொண்டு வந்த தக்கமுன்னேற்பாட்டுடன் திறந்து பார்த்தனர். குண்டக்க மண்டக்க ஏதாவது இருக்கப்போகிறதென்று போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் நினைத்தபோது உள்ளேவெறும் காகிதங்களே இருந்தன.
Comments
Story first published: Friday, July 28, 2006, 5:30 [IST]