அதை செஞ்சவரு.. இதை செய்யலையே.. ஜெ
சென்னை:
சிறுதாவூர் நில பிரச்சனை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனைவரவேற்கிறேன் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,சிறுதாவூர் நிலப் பிரச்சனை குறித்து உண்மையை அறிய உயர்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி கேபி.சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப் போவதாக கருணாநிதி விதி 110ன் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த விசாரணைக் கமிஷனை நான் வரவேற்கிறேன். அப்போது தான் உண்மைவெளிவரும். நியாயமான முறையில் இந்த விசாரணை நடைபெறும் என்றுஎதிர்பார்க்கிறேன்.
அதே நேரத்தில் நியமிக்கின்ற குழுவினர் கேட்கிற கேள்விகளுக்குபத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம்மக்கள் காணும் வகையில் கருணாநிதி பதில் அளித்து, தனது மகன்கள், மகள்கள்,மனைவி, மருமகன்கள், மருமகள்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் முழுவதையும்கூற அவருக்கு வசதிப்படும் தேதியைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன்.
விசாரணைக் கமிஷன் அறிவிப்பை வெளியிட்ட அதே வேகத்தில் இதற்கானதேதியையும் கருணாநிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.