ஜெயேந்திரருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரும் கைதாவதற்கு முன்பு இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தின் கீழ்இருந்தனர்.இருவரும் கிரிமினல் வழக்கில் கைதானதால் அந்தப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. கடந்த1996ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதானபோது அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவுபாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் ஜாமீனில விடுதலையாகி வெளியே வந்த பிறகு மீண்டும் இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.தற்போது ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். எனவே மீண்டும்அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
ஜெயேந்திரருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால் இந்தப் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications