பெரியாறு-கேரள மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிறப்பித்தஉத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.இந்தப் பணிகளை செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி உத்தரவிட்டது.ஆனால் இதை ஏற்க மறுத்த கேரள அரசு அவசர அவசரமாக சட்டசபையில்சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைஅமல்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கேரள அரசுஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்றுபரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், விசாரணையே இல்லாமல் மனுவைத் தள்ளுபடிசெய்து விட்டது.
இதையடுத்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுக்கப்படும் என கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர்பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications