ஏர்டெல் Vs
அய்ஸால் (மிஸோரம்):
மிஸோரம் மாநிலத்தில், பாரத் சன்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல் ) நிறுவனத்தின்செல்போன் சிக்னல்களை ஏர் டெல் நிறுவனம் தடுத்ததாக பி.எஸ்.என்.எல். புகார்கூறியுள்ளது.
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையில் குதித்துள்லநிலையில், ஒருவருக்கு ஒருவர் தொழில் போட்டியால் மக்களை வாட்டி வருகின்றனர்.பல நேரங்களில் ஒரு நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து இன்னொரு நிறுவனதொலைபேசியை தொடர்பு கொண்டால் அவ்வளவு சீக்கிரத்தில் இணைப்புகிடைப்பதில்லை.
இதற்கு ஏதாவது சாக்குபோக்கு காரணங்களை கூறி வருகின்றன தனியார்நிறுவனங்கள்.
இந் நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் சிக்னல்களை வேண்டும் என்றேஏர்டெல் நிறுவனம் தடுத்து வருவதாக பி.எஸ்.என்.எல். குற்றம் சாட்டியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் எங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த முனைந்துள்ளதுஏர்டெல். இதனால் எங்கள் வாடிக்கையாளர்களால், ஏர்டெல் செல்போன்களைத்தொடர்பு கொள்ள முடியாமல் போய விட்டது.
இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாக எச்சரித்துள்ளோம் எனபிஎஸ்என்எல் கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக புகார் கடிதம் ஒன்றை தொலைத்தொடர்பு முறைப்படுத்தும்ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளது.