பெங்களூர்: கொலையான கால்சென்டர் ஊழியர் விபசாரப் பெண்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

பெங்களூர் கால் சென்டரில் வேலைபார்த்த தானியா பானர்ஜி ஏற்கனவே விபசாரவழக்கில் கைது செய்யப்பட்டவர் என கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Gruraj
பெங்களூரில் உள்ள அவிவா கால் சென்டரில் வேலை பார்த்து வந்தவர் தானியாபானர்ஜியை (32) அவரது காதலரும் அவருடன் வேலை பார்த்தவருமான குருராஜ்கிஷோர் (27) கொலை செய்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது,தானியாவை தான் காதலித்தாகவும், ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்ததால் குத்திகொன்றதாகவும் குருராஜ் கூறினார்.

மேலும், நீ வாங்கும் மாத சம்பளத்தை (ரூ. 14,000) நான் ஒரே நாள் இரவில்(விபச்சாரம் செய்து) சம்பாதித்து விடுவேன் என்று கூறியதாகவும், தன்னை முகத்தில்அறைந்து கேவலப்படுத்தியதாகவும் குருராஜ் கூறியுள்ளார். இதனால் தான் கோபத்தில்தானியாவை கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

இந் நிலையில் தானியா பற்றி திடுக்கிடும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.இவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கொல்கத்தாவில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போது தனது தோழியுடன் சேர்ந்துவிபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tanya
கொல்கத்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் செய்தபோதுதானியாவும் அவரது தோழியும், புரோக்கர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந் சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி நடந்துள்ளது. 3 பேரும் பின்னர்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு தானியா அவமானத்தால்கொல்கத்தா வேலையை விட்டு விட்டு பெங்களூரில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இங்கும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த தானியா அவ்வப்போதுவிபச்சாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் கூடஅவரை குருராஜ் காதலித்துள்ளார் என்பது தான் இதில் சோகம்.

தானியா, ஜாலியாக சுற்றுவதிலும் பப்களுக்குச் சென்று தண்ணியடிப்பதிலும் மிகுந்தஆர்வம் கொண்டவர் என்றும், அதற்கு தேவையான பணத்திற்காக அவர் விபசாரத்தில்ஈடுபட்டார் என்றும் பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையிலும்உறுதியாகியுள்ளது.

போலீசாரிடம் குருராஜ் கொடுத்த வாக்குமூலத்தில், தானியாவுக்கு செக்ஸ்சில் ஆர்வம்அதிகம். இதனால் தான் ஆண்களுன் சுற்றினார். நான் மறுத்தும் கூட பலமுறை என்னைசெக்ஸ் வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தினார். நான் அவரை காதலித்தேன்,திருமணம் செய்ய நினைத்தேன். அவரைப் பற்றி தெரிந்த பின்னரும் கூட நான்அவரையே காதலித்தேன்.

சம்பவம் நடந்த இரவு காரில் இருவரும் சென்றோம். அப்போது கல்யாணத்தைப் பற்றிதானியாவிடம் பேசினேன். ஆனால், என் ஒரு நாள் இரவு வருமானம் தான் உன்சம்பளம் என்று சொல்லி முகத்தில் அறைந்தாள். அந்த அவமானத்தை என்னால்ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான் காரில் நான் எப்போதும் வைத்திருக்கும்கத்தியால் அவரை குத்திக் கொன்றேன்.

கொலையை பெங்களூர் வயாலிகாவல் பகுதியில் சேங்கி டேங்கி அருகே காரில்வைத்தே செய்துவிட்டேன். இதையடுத்து 200 கி.மீ. காரை ஓட்டிச் சென்று காட்டுப்பகுதியில் உடலை போட்டுவிட்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+