உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 49ஆகும். ஆனால்தற்போது 38 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 5 புதிய நீதிபதிகளின்பெயர்களை உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தது.இந்தப் பட்டியலை உச்சநீதிமன்றம், மத்திய அரசும் பரிசீலித்து இறுதி செய்தன. இதையடுத்து இப்பட்டியல்குடியரசுத் தலைவர் ஒப்புதலுககு அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஐந்து புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர்மாளிகை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வருகிற திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றஅரங்கில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் விவரம்: வழக்கறிஞர்கள் கே. வெங்கட்ராமன், கே.சந்துரு,வி.ராமசுப்ரமணியன், எஸ்.மணிக்குமார் மற்றும் உயர்நீதிமன்ற கண்காணிப்பு அதிகாரி ஏ.செல்வம்.
ஐந்து புதிய நீதிபதிகளின் நியமனத்தின் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்கிறது.












Click it and Unblock the Notifications