பொன்னையன் எங்கே?: கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள்.அது இருப்பதாக சொன்ன பொன்னையன் இப்போது எங்கே இருக்கிறார்? என்றுமுதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் தரிசி நிலம் குறித்து நடந்த விவாதம்:

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): திமுகவின் தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் இருப்பதாகவும், அதை நிலமற்ற ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டுஏக்கர் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்த திட்டத்தைநிறைவேற்றுவீர்களா?

அமைச்சர் பொன்முடி: அரசுக்கு சொந்தமான நிலங்கள் நிச்சயம் ஏழைகளுக்குவழங்கப்படும்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அதிமுக அரசு 2001-02ம் ஆண்டு தாக்கல் செய்தபட்ஜெட்டில் பயிர் செய்ய ஏற்ற 20 லட்சம் ஹெக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசுநிலங்கள் இருப்பதாகவும், அதை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் தரிசு நிலம் குறித்தபுள்ளி விவரம் தந்தோம்.

முதல்வர் கருணாநிதி: 2001-02ம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர்பொன்னையன் 43 சதவீத நிலம் சாகுபடி செய்யப்படுவதாகவும், 20 லட்சம்ஹெக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசு நிலமாகவும் இருப்பதாக தெரிவித்தார். நாங்களும்அதன் அடிப்படையில் தெரிவித்தோம்.

நீங்கள் விரும்பினால் அந்த நிலம் எங்கு இருக்கிறது என்று முன்னாள் முதல்வரிடம்கேட்டறிந்து சொன்னால் அதை மேம்படுத்த இந்த அரசு முன் வரும்.

ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் எங்கள் ஆட்சியின் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தைபண்படுத்தி விளைச்சல் நிலமாக மாற்றுவோம் என்று தான் கூறினோம்.

முதல்வர் கருணாநிதி: பண்படுத்தியதையும், பண்படுத்த வேண்டிய நிலத்தையும்தருவது தான் எங்கள் ஆசை. நீங்கள் தவறான புள்ளி விவரங்களை தந்துஇருக்கிறீர்கள்.

ஓ.பன்னீர்செல்வம்: அரசு நிலம் உள்ளது, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது, தனியார்நிலம் உள்ளது என்று மூன்றையும் சேர்த்து தான் நாங்கள் கூறியுள்ளோம். ஆனால்,நீங்கள் அந்த நிலங்களை எல்லாம் ஏழைகளுக்கு தலா இரண்டு ஏக்கர் கொடுக்கப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது எப்படி கொடுக்கப் போகிறீர்கள்?

முதல்வர் கருணாநிதி: தவறான புள்ளி விவரத்தை ஒரு தரமான அரசு தரும் என்றுநாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் நிலம்வழங்கப்படும். அரசுக்கு சொந்தம் இல்லாத தரிசு நிலங்களை பண்படுத்திஅவர்களுக்கே தருவோம்.

ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் சொன்னது பண்படுத்துவோம் என்று மட்டுமே. ஆனால்,நீங்கள் ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறீர்கள்.அதற்கு நிலம் எங்கே இருக்கிறது?

முதல்வர் கருணாநிதி: நிலம் எங்கே இருக்கிறது என்கிறார். நிலம் இருப்பதாகஅறிவித்த பொன்னையன் இப்போது எங்கே இருக்கிறார்? என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+