இலங்கை-வெளியேறும் டென்மார்க், பின்லாந்து
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இலங்கை விமானப் படைதொடர்ந்து நான்காவது நாளாக குண்டு வீசித் தாக்குதல் நிடத்தி வருகிறது.
திரிகோணமலையில், கதிரவேலி என்ற இடத்தில் வெறுகல் ஆற்றின் குறுக்கேகட்டப்பட்டுள்ள மதகுகளை விடுதலைப் புலிகள் சில நாட்களுக்கு முன்பு மூடிவிட்டனர்.இதனால், அங்கிருந்து பல்வேறு சிங்கள கிராமங்களுக்கு நடந்து வந்த குடிநீர்வினியோகம் தடைபட்டது.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். பலர்காயமடைந்தனர்.
புலிகள் மகாம்கள் மீது மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்கள் வசிக்கும்பகுதிகளிலும் விமானப் படைகுண்டு வீசித் தாக்கி வருகிறது.
விமானப் படையினரின் இந்தத் தாக்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்தது.இன்றுகாலை முதல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவருகின்றன.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத்தலைவர் எழிலன் கூறுகையில்,
இன்று ஒரு குடிநீர்த் தொட்டி அருகே குண்டு விழுந்தது. அப்பகுதியில்முன்னெச்சரிக்கையாக தமிழர்கள் வெளியேறறப்பட்டதால் உயிரிழப்போ, காயமோஇல்லை. இப்பகுதியில ராணுவத்தினர் ஊடுறுவ முயன்றனர். ஆனால் அவர்களைவிடுதலைப் புலிகளின் தரைப்படையினர் விரட்டி அடித்து விட்டனர் என்றார்.
இந் நிலையில் சில புத்த மத துறவிகள், விடுதலைப் புலிகள் அடைத்துள்ளமதகுகளைத் திறக்க அவர்களாகவே முயன்று வருகின்றனர். அவர்களுக்குத்துணையாக ராணுவ வீரர்களும் அப்பகுதியை நெருங்க முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த பின்லாந்துநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி வருகின்றனர்.இதேபோல டென்மார்க் நாட்டு பார்வையாளர்களும் இலங்கையிலிருந்துவெளியேறுகிறார்கள்.
இந்த இரு நாடுகள் தவிர கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பியநாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையிலிருந்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் வெளியேறவேேண்டும் என்று ஏற்கனவே புலிகள் கெடு விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செய்தித் தொடர்பாளர்தொர்பின்னூர் ஒமர்சன் கூறுகையில், டென்மார்க்கும், பின்லாந்தும் குழுவிலிருந்துவிலகியிருப்பது கவலைதருகிறது. இதனால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.
ஸ்வீடன் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.மேலும் நார்வே, ஐஸ்லாந்து நாடுகளும் இந்த விஷயத்தில் எடுக்கப் போகும்நிடவடிக்கை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நாடுகளும் வெளியேறிவிட்டால் நிலைமை கை மீறிப் போகும் அபாயம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications