மோடிக்கு எதிராக ஐஐடி பேராசிரியைகள் ஆர்ப்பாட்டம்!
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குஎதிராக 2 பேராசிரியைகள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் முதல்வர் மோடி, சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்திருந்தார்.மோடி நகழ்ச்சி நடந்த இடத்திறகு வந்தபோது மேடையில் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது, இரண்டு பெண்கள்வேகமாக மேடையை நோக்கி விரைந்து வந்து மோடியை நோக்கி தங்களது கையில் இருந்து வெள்ளைத்துணியை அவரை நோக்கி ஆட்டினர்.
பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அந்தப் பெண்கள் இருவரும் நந்திதா தாஸ்குப்தா, ஏனாஷி பட்டச்சார்யா என்பதும், ஐஐடியில் ஆசிரியைகளாக வேலை பார்த்து வருகின்றனர் என்றும்பின்னர் தெரிய வந்தது. செய்தியாளர்கள், எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, குஜராத்கலவரத்தை அடக்க மோடி தவறி விட்டார்.
நர்மதா அணை விவகாரத்திலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அமீர்கானின் ஃபனா படத்தையும் திரையிடதடை விதித்தார். இதற்கு எதிர்பபு தெரிவிக்கவே இப்படிச் செய்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications