திருவாசகம் பாட அனுமதிக்க முடியாது-தீக்ஷிதர்கள்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளில்மாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம். தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கமுடியாது என்று தீக்ஷிதர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட கோவிலைக் கட்டுப்படுத்தி வரும்தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம்நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் தமிழ்ப் புலவர் ஒருவர் திரளானதமிழார்வலர்களுடன் கோவிலுக்குச் சென்று தேவாரம் பாடப் போவதாக அறிவித்தார்.ஆனால் அவரை போலீஸார் கைது செய்தனர். இது பெரும்சர்ச்சையைஎழுப்பியுள்ளது.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வம்பிரச்சனை கிளப்பினார். அப்போது தமிழக கோவிலில் தமிழில் பாட தடையா என்றுமுதல்வர் கருணாநிதியும் ஆதங்கம் வெளியிட்டர். இந்தப் பிரச்சினை குறித்து சட்டவல்லுனர்களுடன் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்அறிவித்துள்ளார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து தீக்ஷிதர்களுக்கு ஆதரவான சிலஅமைப்புகள் இணைந்து சிதம்பரத்தில் அவசர ஆலோசனை நடத்தின. இதில்தீக்ஷிதர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைஓதுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட முயற்சியைஅனுமதிக்க முடியாது. பாரம்பரியமாக நடந்து வரும் முறைகளை மாற்ற அனுமதிக்கமாட்டோம். அரசும் அதைச் செய்ய முயற்சிக்கக்கூடாதுஎன்று கூறி தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீக்ஷிதர்களின் இந்தத் தீர்மானமும், கண்டனமும் இந்தப் பிரச்சினையை மேலும்சிக்கலாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+