கிரிக்கெட்: இலங்கை வீரர்கள் புதிய உலக சாதனை!
கொழும்பு:
தென்னாப்பிரிக்காவுடன் ஆன முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கைகேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும், விக்கெட் கீப்பர் குமார சங்கக்காராவும் சேர்ந்து624 ரன்கள் சேர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
![]() |
ஆனால் அவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஜெயவர்த்தனேவும்,விக்கெட் கீப்பர் சங்கக்காராவும் சேர்ந்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை பதம்பார்க்க ஆரம்பித்தன்.
தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். இதனால்போட்டியில் பெரும் விறுவிறுப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஜெயவர்த்தனேவின்ஆட்டத்தில் பொறி பறந்தது. வந்த எந்த ஒரு பந்தையும் விடாமல் பவுண்டரிகளைநோக்கி விளாசித் தள்ளினார் ஜெயவர்த்தனே.
இதனால் ஆட்டம் நடந்த சிங்கள விளையாட்டு மைதானத்தில் ரன் மழை பொழிந்தது.இருவரின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 5விக்கெட் இழப்புக்கு 756 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெயவர்த்தனே 374ரன்களைக் குவித்தார்.
உலக அளவில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த நான்காவது வீரர் என்றபெயரையும் பெற்றார். முதலிடத்தில் லாரா 400 ரன்களுடன் உள்ளதுநினைவிருக்கலாம்.
சங்கக்காரா 287ரன்களை விளாசினார். இருவரும் சேர்ந்து 624 ரன்களை சேர்த்து புதியஉலக சாதனை படைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இணை அதிகஅளவில் ரன்களை சேர்த்தது இதுவே முதல் முறையாகும்.
தொடர்பான செய்திகள்பு இலங்கையின் ஜெயசூரியா மற்றும் மகானமா ஆகியோர் சேர்ந்து 576ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்தச் சாதனையைஇலங்கை வீரர்களை முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை மீண்டும் பேட் செய்ய வைக்க குறைந்தது 588 ரன்கள் எடுத்தாகவேண்டும் என்ற மிகப் பெரிய இலக்குடன் தென்னாப்பிரிக்கா தனது 2வதுஇன்னிங்ஸைத் தொடங்கியது. 3வது நாள் ஆட்டநேர இறுதியில் விக்கெட இழப்பின்றி43 ரன்களை தென்னாப்பிரிக்கா எடுத்துள்ளது.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம் இருப்பதால் இப்போட்டியில் இலங்கை அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதியாகியுள்ளது.













Click it and Unblock the Notifications