இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

க்வானா:

தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்றுநடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களைமீட்பதற்காக கடந்த 3 வாரங்களாக லெபனான் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேலியப்படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலில்இதுவரை 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனான் சுடுகாடாகமாறியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் லெபனானில் பரிதவித்துவருகின்றனர். புகலிடம் தேடி ஓடி வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு 4 ஐ.நா.பார்வையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்துத்தாக்கி வருவதாக இஸ்ரேல் கூறினாலும் இறந்தவர்கள் பெரும்பாலும் அப்பாவிமக்களே.

இதனால் ஐ.நா. சபை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேல் உடனடியாக தனதுபோரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பலமுறை கோரியும் கூட அதைகண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது இஸ்ரேல். லெபனான் மீது உக்கிரமாகதாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், தனது தாக்குதலை சற்றும் தளர்த்திக் கொள்ளாமல்மேலும் மேலும் தீவிரப்படுத்திவருகிறது.

இந்த நிலையில் இன்று தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில்இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் பல வீடுகள்சேதமடைந்தன. ஒரு 3 மாடிக் கட்டடம் பாதியளவு சேதமடைந்தது. இந்தக்கட்டடத்தில் 100 பேர் வரை வசித்து வந்தனர்.

இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 21 பேர்குழந்தைகள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். காயமடைந்தவர்களைமீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர்.ஐ.நா. கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் சிக்கித் தவிக்கும் அப்பாவிமக்கள் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக 3 நாட்களுக்கு சண்டையை நிறுத்தவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் விடுத்தவேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

தற்காலிகமாக போரை நிறுத்துவது நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும்.இது ஒரு மனிதாபிமான செயலாகவும் கருதப்படும். சர்வதேச படையை இரு நாட்டுஎல்லைகளிலும் நிறுத்த இது உதவும். பேச்சுவார்த்தைக்கும் வழி வகுக்கும் என்றுஅன்னான் தெரிவித்தித்திருந்தார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை இஸ்ரேல் பரிசீலனை கூட செய்யாமல் ஒரேயடியாகநிராகரித்து விட்டது. ஐ.நா. வேண்டுகோளை ஏற்க முடியாது. இப்படிச் செய்தால்ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்களது பலத்தை பெருக்கிக் கொண்டு விடுவார்கள் எனஇஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மெயர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+