தீ விபத்தில் 3 குழந்தைகள் பலி; கருணாநிதி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தீவிபத்தில் 2 சிறுமிகள் உள்பட 3பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்கருணாநிதி அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியைஅறிவித்துள்ளார்.

ராயக்கோட்டை அருகே உள்ள கடூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேஷ், மாதேஷ், முனிராஜ். நான்கு பேரும் அண்ணன்,தம்பிகள்.

மாதேஷ் வீட்டில் பலாப் பழக் கொட்டைகள் இருந்தன. இவற்றை சுட்டுத் திண்ணவிரும்பிய நான்கு பேரின் குழந்தைகளும், குடிசைக்கு அருகே வெளியில் ஒரு ஓலைக்கொட்டைக்குள் போய் தீ மூட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாககொட்டகையில் தீப்பற்றியது.

இதில் முனிரத்தினத்தின் மகள் ஈஸ்வரி (வயது 2), மாதேஷ் மகள் புஷ்பா, முருகேஷ்மகன் ஹரிஷ் (3) ஆகியோர் உடல் கருகி இறந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தமூன்று குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும்என அவர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+