ரயில் நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்!
கொல்கத்தா:
ரயில் நிலையங்களுக்குள் செல்ல இனிமேல் பயணிகள் மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள். பயணிகளை வழியனுப்ப வருவோர், வரவேற்க வருவோர்உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்யாதவ் கூறியுள்ளார். இந்த புதிய கட்டுப்பாடு விரைவில் அமலுக்கு வரும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 11ம் தேதி ரயில்களில் வைக்கப்பட்டவெடிகுண்டுகள் வெடித்து200 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பைஉறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியுள்ளது.இதுகுறித்து கொல்கத்தா வந்த ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,இனிமேல் ரயில் பயணிகள் மட்டுமே பிளாட்பாரம் வரை அனுமதிக்கப்படுவார்கள்.வழியனுப்ப வருவோர், வரவேற்க வருவோருக்கு பிளாட்பாரங்களில் நுழைய தடைவிதிக்கப்படும்.
பிளாட்பாரங்களுக்கு முன்னதாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர். விரைவில்இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதேபோல, ரயில் நிலையங்களுக்குள்வந்து செல்வோரை முழுமையாக கண்காணிக்க அதிக அளவில் ரகசிய கேமராக்கள்பயன்படுத்தப்படும். இந்த கேமராக்கள் 24 மணி நேரம் இயங்கும்.
இதேபோல அனைத்து நுழைவாயில்களிலும் நிரந்தரமாக மெட்டல் டிடெக்டர்கருவிகள் பொருத்தப்படும். முக்கிய ரயில் நிலையங்கள், சந்திப்புகளில் காவல்துறைகட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும் என்றார் லாலு.
எனவே இனிமேல், ரயில் புறப்படும் வரை காத்திருந்து, கிளம்பிய பிறகுஉறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் டாடா காட்ட முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications