காஞ்சிபுரம்: வெடிபொருட்களுடன் வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரப்பாககத்தில் ஏராளமான வெடிபொருட்களுடன் வாலிபரைபோலீஸார் கைது செய்தனர்.ஆரப்பாக்கத்தில் இன்று போலீஸார் நல்லதம்பி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனைநடத்தினர். இந்த சோதனையில், 658 ஜெலட்டின் குச்சிகள், 144 மின்சாரடெட்டனேட்டர்கள், 190 மீட்டர் வெடிகுண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒயர்கள்,3500 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்தப் பொருட்களை சேலம்மாவட்டம் திருசெங்கோட்டிலிருந்து வாங்கி வந்ததாக நல்லதம்பி தெரிவித்துள்ளார்.உரிய உரிமம் பெறாமல் இவற்றை வைத்திருந்ததால் நல்லதம்பியை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications