ரூ. 25 கோடி போதைப் பொருள் தீ வைத்து எரிப்
சென்னை:
சென்னையில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 25 கோடிமதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் தீவைத்து எரித்தனர்.
பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்னை வழியாககடத்தப்பட்ட ஹெராயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப் பொருட்களைசென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட 19.7 கிலோ ஹெராயின், 197 கிலோ ஆசிஸ், 343 கிலோகஞ்சா ஆகியவற்றை தீவைத்து எரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்குதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிறுவனத்திற்கு பலத்த பாதுகாப்புடன் இந்த போதைப்பொருட்களை எடுத்துச் சென்றனர்.
சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் தீவைத்து எரித்தனர். நவீன இயந்திரங்களில் வைத்துஇவை எரிக்கப்பட்டன.
இதைப் பார்வையிடுவதற்காக டெல்லியிலிருந்து மத்திய போதைப் பொருள் ஒழிப்புப்பிரிவு இயக்குநர் வர்மா வந்திருந்தார்.இந்திய மதிப்பில் ரூ. 25 கோடி என்று இந்த போதைப் பொருட்களுக்கு மதிப்புஇருந்தாலும் சர்வதேச சந்தையில் இதை விட கூடுதலாக இருக்கும் என வர்மாகூறினார்.












Click it and Unblock the Notifications