82 வயது பாட்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
மருமகளைக் கொன்ற வழக்கில் 82 வயது மூதாட்டிக்கு விதிக்கப்படட் மரணதண்டனையை பஞ்சாப் உயர்நீதிமன்றம் ரத்து செய்து 5 வருட தண்டனையாகமாற்றியது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கவுர் என்ற பெண்மணிகடந்த ஆண்டு தனது வீட்டில் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து இறந்தார். இந்தவழக்கில் கவுரின் மாமியார் ஹர்பன்ஸ் கவுரை (வயது 82) போலீஸார் கைதுசெய்தனர். அவர்தான் ஹர்பிரீத் கவுரை தீவைத்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மோகா மாவட்டசெஷன்ஸ்நீதிமன்றம், பாட்டிக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்பை எதிர்த்து பாட்டியின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்படடது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹர்பன்ஸ் கவுருக்கு மரணதண்டனை விதித்தது அதிகபட்சமானது. இது தவறானதீர்ப்பாகும் என்று கூறி மரணதண்டனையை ரத்து செய்தது.
அதற்குப் பதில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 5000 ரூபாய் அபராதம்விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications