மு.க.ஸ்டாலின் துறையின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மு.க.ஸ்டாலின் வசம் உள்ள உள்ளாட்சித் துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள மகளிர்சுய உதவிக் குழுக்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளைஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது ஸ்டாலின்பேசுகையில்,

இதுவரை செலவிடப்படாமல் இருந்து வந்த சுனாமி நிதியை, கலைஞர் முதல்வரானபின்னர் விரைவுபடுத்தி செலவு செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த 1989ம் ஆண்டுதிமுக ஆட்சிக் காலத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படடது. எந்தநோக்கத்திற்காக இவை தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் கடந்த ஆட்சியில்நிறைவேற்றப்படவில்லை.

ஓட்டுக் குழுக்களாகத்தான் இந்தக் குழுக்களை அதிமுக ஆட்சி பயன்படுத்தி வந்தது.அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சித்தொகையாக நபர் ஒன்றுக்கு ரூ. 7.50 மட்டுமே தரப்பட்டது. திமுக ஆட்சிக்குவந்தவுடன் இத் தொகை ரூ.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் மாநில மகளிர் மேம்பாட்டு கழகம்வசம் இருந்தது. இனிமேல் இது ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் என முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். புதிதாக 25,000குழுக்களை உருவாக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+